கர்த்தரின்
பந்தி
கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி
ஆவலாய் அழைக்கின்றாரே
பயபக்தியோடு நிதானித்தறிந்து
ஆசையாய் பங்குகொள்வோம்
அப்பமும் ரசமும் உண்டு
அதை ஆசிர்வதித்திடும் கர்த்தர் உண்டு
தம் சரீரமாய் இரத்தமாய் மாற்றி
பகிர்ந்து அருளுகின்றார்
என்னை நினைவு கூருங்கள்
நேசரேசுவின் வாக்கிதுவே
கல்வாரி நாதரின் பாடுகளை
கண்முன்னே நிறுத்தி நாம் நோக்கிடுவோம் - அப்பமும்
ஜீவனின் அப்பமும் கிறிஸ்துவே
ஜீவனின் பானமும் இயேசுதானே
தம்மையே பலியாய் ஈந்தல்லோ
தம் மாம்சம் இரத்தத்தை கொடுத்தாரே - அப்பமும்
ஒரே அப்பத்தை நாம் புசிக்கின்றோம்
ஒரே பானத்தை நாம் பருகுகின்றோம்
இயேசுவின் சரீரத்தில் இணைத்து நம்மை
ஐக்கியமாய் நம்மை மாற்றுகின்றார் - அப்பமும்
சபையாய் பஸ்காவை ஆசரிப்போம்
சபையாய் பந்தியில் பங்குகொள்வோம்
மறுபடி பிறந்து நாம் பரிசுத்தமாகி
விருந்து சாலையில் நாம் மகிழ்ந்திடுவோம் - அப்பமும்